மாப்ரோ நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது செபி

By பிடிஐ

மாப்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் நிறுவனர்களுக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி ரூ.18 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் முறையான தகவல்களை தாக்கல் செய்யவில்லை என்பதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

மாப்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. மேலும் 7 முன்னாள் நிறுவனர்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. 2005,2007,2009 மற்றும் 2011ம் ஆண்டுகளில் பங்குதாரர்கள் பட்டியலை மும்பை பங்குச்சந்தைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்கல் செய்யவில்லை என்பதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கின் வர்த்தகம் 430 ரூபாயில் முடிவடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்