அருண் துகால் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ தரமதிப்பீட்டு நிறுவனம் இக்ரா-வின் தலைவராக வரும் ஜனவரி 29-ம் தேதி முதல் பொறுப்பேற்க இருக்கிறார்.

$ இதற்கு முன்பு ஸ்ரீராம் கேபிடல் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். கடந்த மாதம் இந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டார்.

$ 1967-ம் ஆண்டு ஐஐடி டெல்லியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்து சில நிறுவனங்களில் வேலை செய்து 1974-ம் ஆண்டு ஐஐஎம் அகமாதாபாத்தில் நிர்வாகபடிப்பு முடித்தார்.

$ அதன் பிறகு பேங்க் ஆப் அமெரிக்காவில் இணைந்தார். பிலிப்பைன்ஸ், ஹாங்காங், டோக்கியோ, சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றினார். 1998 முதல் 2001-ம் ஆண்டு வரை பேங்க் ஆப் அமெரிக்காவின் சி.இ.ஓ-வாக இருந்தார். 2001-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

$ 2001 ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றினார். இக்ரா உள்ளிட்ட பல நிறுவனங்களில் இயக்குநர் குழுவில் இருந்திருக்கிறார்.

$ ஐஐஎம் அகமாதாபாத்தில் வென்ச்சர் கேபிடல் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி குறித்து வகுப்புகளும் எடுத்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 min ago

விளையாட்டு

10 mins ago

சினிமா

11 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

45 mins ago

சினிமா

51 mins ago

இந்தியா

32 mins ago

கருத்துப் பேழை

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்