சொத்து பறிமுதல் நடவடிக்கை; விஜய் மல்லையாவின் தடை கோரும் மனு நிராகரிப்பு: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக மேற்கொள் ளும் சொத்து பறிமுதல் நடவடிக் கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று விஜய் மல்லையா தாக்கல் செய்திருந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விஜய் மல்லையாவின் சொத்து களை பறிமுதல் செய்ய சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. இந்த அனுமதிக்கு தடை விதிக்குமாறு மும்பை உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு மீதான விசாரணை நீதிபதிகள் அகில் குரேஷி, எஸ்.ஜே. கதாவாலா ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்படி கீழ்நிலை நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான தீர்ப்பு வரும்வரை பறிமுதல் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப் பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பறிமுதல் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதற்கு போதிய முகாந்திரம் இல்லை என்று கூறி தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

கடந்த ஜனவரி 5-ம் தேதி விஜய் மல்லையாவை பொருளா தார குற்றவாளி என அந்நியச் செலாவணி தடுப்பு சட்ட வழக்கு களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன் றம் அறிவித்தது. அத்துடன் சொத்து களை முடக்கவும் உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

49 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்