பஜாஜ் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 14 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமடைந்திருக்கிறது. நுகர்வோர் பொருள் மற்றும் விளக்குகள் பிரிவில் குறைவான விற்பனை மற்றும் நிரந்தர செலவுகள் அதிகரித்ததால் நஷ்டமடைந்தது.
மேலும் கடந்த வருடம் இதே காலாண்டில் 15 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனம் நஷ்டமடைந்தது. எங்களது நிரந்தர செலவுகள் தொடர்ந்து அதிகரித்திருக்கிறது. விற்பனையிலும் வளர்ச்சி இல்லாததால் நஷ்டமடைந்திருப்பதாகவும், 3 மற்றும் 4வது காலாண்டில் இந்த நிலை மாறும் என்று நிர்வாக இயக்குநர் சேகர் பஜாஜ் குறிப்பிட்டார். மேலும் கடந்த நிதி ஆண்டில் 4,060 கோடியாக ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 4,700 கோடி ரூபாயாக உயரும் என்றும் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நிறுவனத்தின் நிகர விற்பனை 9.32 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 940 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை 1,028 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. காலாண்டு முடிவுகளின் காரணமாக இந்த பங்கு நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 11.96% சரிந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
32 mins ago
இந்தியா
47 mins ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago