ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் சந்தையின் மதிப்பு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1,500 கோடி டாலரைத் தொடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
2012-ம் ஆண்டு 80 லட்சம் நபர்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கினார்கள், இப்போது 3.5 கோடி நபர்கள் வாங்குகிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 கோடி நபர்கள் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவார்கள். கடந்த டிசம்பர் நிலவரப்படி 30.2 கோடி நபர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள்.
இப்போதைக்கு இணை யத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்து 5 கோடி நபர்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவார்கள் என்று கூகுள் இந்தியா நிறுவனத்தின் ராஜன் ஆனந்தன் தெரிவித்தார். அப்போது இந்த சந்தையின் மதிப்பு 1,500 கோடி டாலராக இருக்கும் என்றார் அவர். மேலும் 10 கோடி வாடிக்கையாளர்களில் 4 கோடி பேர் பெண் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள்.
முக்கிய செய்திகள்
உலகம்
10 mins ago
இந்தியா
44 mins ago
கல்வி
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
10 hours ago
சுற்றுச்சூழல்
11 hours ago
உலகம்
11 hours ago
வாழ்வியல்
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago