அந்நிய முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனமாக வீட்டுக்கடன் வழங்கும் ஹெச்.டி.எப்.சி. நிறுவனம் திகழ்கின்றது. செப்டம்பர் காலாண்டு முடிவில் இந்நிறுவன பங்கில் அந்நிய முதலீடு 78 சதவீதம் இருக்கிறது.
சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் 30 பங்குகளில் 75 சதவீதத்துக்கு மேலே அந்நிய முதலீடு இருப்பது ஹெச்.டி.எப்.சி.யில்தான்.
கடந்த ஜூன் காலாண்டில் 77.85 சதவீத அந்நிய முதலீடு இருக்கிறது. இதற்கு முந்தைய காலாண்டில் 77.36 சதவீதம் இருந்தது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் 73.09 சதவீதமாக அந்நிய முதலீடு இருந்தது.
இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் அந்நிய முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித் திருக்கிறார்கள். 2012-ம் ஆண்டு மே மாதம் அந்நிய நிறுவன முதலீட்டை 100 சதவீதம் அதிகரித்துக்கொள்ள இயக்குநர் குழு ஒப்புதல் அளித்தது.
கடந்த ஜூலை செப்டம்பர் காலாண்டில் இந்த பங்கு 6.25 % உயர்ந்தது. ஆனால் சென்செக்ஸ் 4.78% மட்டுமே உயர்ந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் 23,000 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது.
மேலும் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் வசம் 10.32% பங்குகள் இருக்கின்றன. மொத்தமாக பார்க்கும்போது 88.17% பங்குகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வசம் இருக்கின்றது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தொழில்நுட்பம்
7 hours ago
சினிமா
8 hours ago
க்ரைம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago