விஜய் மல்லையா விவகாரம்: இன்டர்போலுக்கு விளக்கம் அளித்தது அமலாக்கத்துறை

By செய்திப்பிரிவு

விஜய் மல்லையாவுக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப் பிப்பதற்காக அமலாக்கத்துறை இன்டர்போலுக்கு விளக்கம் அளித் திருக்கிறது. விஜய் மல்லையா விவகாரத்தில் சட்ட விதிகள் எப்படி பின்பற்றப்பட்டன என்பது குறித்து அமலாக்கத்துறை விளக் கம் அளித்திருக்கிறது.

விஜய் மல்லையா விவ காரத்தில் அனைத்து சட்ட விதிக ளும் பின்பற்றப்பட்டிருக்கிறது. அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் கட்டாயம் கொடுக்கப்பட வேண் டும். இது போன்ற வாரண்ட் தேவைப்படுகிறது. பல வழக்குக ளில் அவரை விசாரனை செய்ய வேண்டிருக்கிறது என்று அம லாக்கத்துறை குறிப்பிட்டிருக் கிறது.

விஜய் மல்லையா மீது ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துவிட்டால் எந்த நாட்டில் இருந்தாலும் இன்டர்போல் அவரை கைது செய்து இந்தியா விற்கு கொண்டு வந்து விட முடியும்.

தவிர விஜய் மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கோரிக்கை வைத்திருக்கிறது. இது தொடர்பான முடிவை மும்பை நீதிமன்றம் இன்று எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அமலாக்கத்துறை இன்டர் போலிடம் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு விஜய் மல்லையா விவகாரத்தில் இன்டர்போல் அமலாக்கத் துறையிடம் விளக் கம் கேட்டிருந்தது.

நேற்று முன் தினம் அமலாக் கத்துறை விஜய் மல்லையாவின் 1,411 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது குறிப் பிடத்தக்கது.

விஜய் மல்லையா மீது ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துவிட்டால் எந்த நாட்டில் இருந்தாலும் இன்டர்போல் அவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வந்து விட முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

16 mins ago

வேலை வாய்ப்பு

39 mins ago

தமிழகம்

54 mins ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்