நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதம்

By பிடிஐ

நாட்டின் பொருளாதார வளர்ச்சி செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 5.3 சதவீதத்தை எட்டியுள்ளது. ஜூன் காலாண்டில் இது 5.7 சதவீதமாக இருந்தது. வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதையே இது காட்டுகிறது. இருப்பினும் எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிக அளவு வளர்ச்சியே எட்டப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்துடன் முடிவ டைந்த காலாண்டில் வளர்ச்சி அதிகரித்ததற்கு உற்பத்தித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியே காரணமாகும். அப்போது உற்பத்தித் துறை வளர்ச்சி 3.5 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது. அதன் பிறகு உற்பத்தித் துறை சரிவைச் சந்தித்துள்ளது. செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் உற்பத்தித் துறை வளர்ச்சி 0.1 சதவீதமாக இருந்தது. கடந்த காலாண்டில் வீட்டு உப யோகப் பொருள்களின் தேவை அதிகமாகவே இருந்தது.

நாட்டின் ஒட்டுமொத்த உள் நாட்டு உற்பத்தியில் 14 சதவீத பங்கை வகிக்கும் வேளாண்மைத் துறை 3.2 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த ஆண்டு முழுமைக்கும் வேளாண் துறை ஒட்டுமொத்த வளர்ச்சி ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். 2013-14-ம் நிதி ஆண்டில் வேளாண் துறை வளர்ச்சி 4.7 சதவீதமாக இருந்தது.

போதிய அளவு பருவமழை இல்லாததே சரிவுக்கு முக்கியக் காரணமாகும். இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேலும் குறையும் என வேளாண் துறை கணித்துள்ளது. சேவைத் துறை, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தக சேவை துறை 9.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஜூனில் முடிவடைந்த காலாண்டில் இத்துறை 10.4 சதவீத வளர்ச்சியை எட்டியி ருந்தது. சமூக மற்றும் தனி நபர் சேவைத்துறை 9.6 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

முந்தைய காலாண்டில் இத்துறையின் வளர்ச்சி 9.1 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் பற்றாக்குறையைக் குறைக்க அரசு சிக்கன நடவடிக்கையை அடுத்து வரும் மாதங்களில் எடுக்கும்பட்சத்தில் வளர்ச்சி விகிதம் மேலும் சரியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்