டெலிகாம் துறையில் இருக்கும் முன்னணி நிறுவனமான பார்தி ஏர்டெல் மும்பையைச் சேர்ந்த டெலிகாம் நிறுவனமான லூப் டெலிகாம் நிறுவனத்தை வாங்க இருக்கிறது. எவ்வளவு தொகைக்கு லூப் டெலிகாம் வாங்கப்பட்டது என்ற தகவல் தெரிவிக்கப் படவில்லை.
இருந்தாலும் அறிவிக்கப்படாத தகவல்களின்படி 700 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட இருப்பதாக தெரிகிறது. லூப் மொபைலுக்கு மும்பையில் மட்டும் 30 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். இனி இவர்கள் ஏர்டெல் நெட்வொர்க்கிற்கு மாறி விடுவார்கள். லூப் மொபைல் நிறுவனத்தின் லைசென்ஸ் வரும் நவம்பர் மாதம் நிறைவு பெற இருக்கிறது.
இருந்தாலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அவர்களுக்கு டெலிகாம் சேவை கிடைக்கும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக தெரிகிறது. இருப்பினும், லூப் நிறுவனத்தின் பணியாளர்களை வாங்கவில்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
39 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago