துணை கவர்னர் பதவி: முன்னணியில் கே.ஆர். காமத்

By செய்திப்பிரிவு

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவிக்குப் பொருத்தமானவர்கள் பட்டியலில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவராக உள்ள கே.ஆர். காமத் முன்னணயில் உள்ளார்.

இப்போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக உள்ள கே.சி. சக்ரவர்த்தி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இப்பதவிக்குப் பொருத்தமானவர்களைத் தேடும் பணி தீவிரமானது. கடந்த வெள்ளிக்கிழமை 9 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

பொதுத்துறை வங்கிகளின் தலைவராக குறைந்தபட்சம் ஓராண்டுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்கள் துணை கவர்னர் பதவிக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவராக காமத் கடந்த 6 ஆண்டுகளாக உள்ள கே.ஆர். காமத் மிகுந்த அனுபவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்