எஸ்.பி.ஐ. லாபம் ரூ. 3,100 கோடி
பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி செப்டம்பர் காலாண்டின் நிகரலாபம் 30.5% உயர்ந்து 3,100 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 2,375 கோடி ரூபாயாக இருந்தது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை 41 சதவீதம் உயர்ந்து 4,274 கோடி ரூபாயாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 4.89 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 5.64 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கியின் நிகர வாராக்கடன் 2.73 சதவீதமாக இருந்தது. செப்டம்பர் காலாண்டின் மொத்த வருமானம் 37,199 கோடி ரூபாயிலிருந்து 41,833 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. வங்கியின் இதர வருமானம் 32 சதவீதம் உயர்ந்து 4,570 கோடி ரூபாயாக இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் லாபம் 6.71% உயர்வு
சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவ னத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 6.71 சதவீதம் உயர்ந்து 91.81 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 88.94 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் மொத்த வருமானம் 34.93% உயர்ந்து 2,683 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,988 கோடி ரூபாயாக இருக்கிறது. முதல் அரையாண்டில் நிகர லாபம் 19 சதவீதம் உயர்ந்து 167 கோடி ரூபாயாக இருக்கிறது. அதேபோல முதல் அரை யாண்டில் மொத்த வருமானம் 33% உயர்ந்து 4,988 கோடி ரூபாயாக இருக்கிறது. மொத்தத்தில் இருசக்கர வாகன விற்பனை 35% உயர்ந்தது. மூன்று சக்கர வாகன விற்பனை 24% உயர்ந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
32 mins ago
வணிகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
54 mins ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
27 mins ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago