வரைவு இழப்பீடு மசோதாவுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படும் பட்சத்தில் மாநில அரசுகளுக்கு வரிகள் குறையக்கூடும். அதற்கான வரைவு இழப்பீடு மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் நேற்று ஒப்புதல் வழங்கியது. ஜிஎஸ்டியில் நான்கு முக்கியமான விஷயங்களில் ஒன்று இந்த இழப்பீடு மசோதாவாகும். மீதமுள்ள மூன்று விஷயங்களுக்கும் அடுத்த கூட்டத்தில் தீர்வு எட்டப்படும் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

உதய்பூரில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அருண் ஜேட்லி கூறியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் பட்சத் தில் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு ஏதேனும் வரி வருவாய் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அதற்குரிய இழப்பீடு வழங்கப்படும். அடுத்த முக்கியமான வரைவுகளான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐ ஜிஎஸ்டி), மாநில ஜிஎஸ்டி (எஸ் ஜிஎஸ்டி) மற்றும் மத்திய ஜிஎஸ்டி (சி ஜிஎஸ்டி) ஆகியவை இந்த கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அடுத்த கூட்டம் மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளில் புதுடெல்லியில் நடக்க இருக்கிறது.

அனைத்து வரைவு மசோதாக் ளுக்கும் ஒப்புதல் கிடைத்த பிறகு, நாடாளுமன்றத்துக்கு அனுப்பப் படும். இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 9-ம் தேதி தொடங்கப்படுகிறது. அதற்குள் அனைத்துக்கும் ஒப்புதல் பெறப் படும். அதேபோல மாநில ஜிஎஸ்டி-யானது மாநில சட்ட பேரவைகளில் நிறைவேற்றப்படும். இதற்கடுத்து கமாடிட்டிகளுக்கு ஏற்ப ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயம் செய்யப்படும்.

மார்ச் 5-ம் தேதிக்கு பிறகு, கமாடிட்டிகளுக்கு வரி நிர்ணயம் செய்யும் பணிகளை அரசு அலுவலர்கள் செய்வார்கள். இதற்கடுத்த கூட்டத்தில் வரிகளுக்கு ஒப்புதல் பெறப்படும் என நிதி அமைச்சர் ஜேட்லி கூறினார்.

5%, 12%, 18% மற்றும் 28 % என நான்கு வகையான வரி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்