பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. சமீபத்தில் இந்த பொறுப்புக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்.
2016-ம் ஆண்டிலிருந்து கார்ப்பரேஷன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவர்.
வேளாண்மை உயர்கல்வி பட்டம் பெற்றவர். நிதிச்சேவை துறையில் மேலாண்மை பட்டமும், இந்திய வங்கியாளர் நிறுவன பயிற்சியும் முடித்தவர்.
அலஹாபாத் வங்கியில் 1982-ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தவர். இந்த வங்கியில் செயல் இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
வங்கிச் சேவைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். விவசாயம், சில்லரை வர்த்தகம், கடன் மற்றும் திட்ட மேம்பாடு உள்ளிட்ட வங்கிச் சேவை துறைகளில் வல்லுநர்.
இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ‘வளரும் நாடுகள் எதிர் கொள்ளும் பொருளாதார சவால்கள்’ சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டவர். கொல்கொத்தா ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மேலாண்மையியல் தொடர்பாக பல பங்களிப்புகளை செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஆன்மிகம்
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago