நாட்டில் உள்ள தொலைபேசி சந்தா தாரர்களின் எண்ணிக்கை 112 கோடியிலிருந்து 115 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 112.39 கோடி சந்தாதாரர்களாக இருந்தது. இந்த எண்ணிக்கை டிசம்பர் மாதத் தில் 115.17 கோடியாக உயர்ந்துள்ள தாக தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அறி வித்துள்ளது. மொத்தம் 2.48 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
நகர்ப்புறத்தில் நவம்பரில் 65.90 கோடியாக இருந்த சந்தாதாரர் களின் எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் 68.31 கோடியாக உயர்ந் துள்ளது. கிராமப்புற வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை 46.49 கோடியிலிருந்து 46.86 கோடியாக அதிகரித்துள்ளது.
தொலைபேசி அடர்வு 87.81 ஆக நவம்பரில் இருந்தது. இது டிசம்பர் மாதம் 89.90 ஆக அதிகரித்துள்ளது.
கம்பியில்லா சந்தாதாரர் எண்ணிக்கை 109 கோடியிலிருந்து 112 கோடியாக அதிகரித்துள்ளது.
கம்பி வழி தொலைபேசி சந்தா தாரர் எண்ணிக்கை 2.40 கோடி யாகக் குறைந்துள்ளது. நவம்பரில் 2.44 கோடியாக இருந்தது.
டிசம்பர் மாதத்தில் 56 லட்சம் பேர் ஒரு செல்போன் நிறுவனத்தி லிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறியுள்ளனர். இணையதள சேவை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 21.82 கோடியாக உயர்ந்துள்ளது. இது நவம்பர் மாதத்தில் 23.60 கோடியாக இருந்தது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
10 mins ago
சுற்றுலா
13 mins ago
வணிகம்
6 hours ago
இந்தியா
38 mins ago
சினிமா
33 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago