இமாசலப் பிரதேசம், உத்திராகண்ட்டுக்கு சலுகை

By செய்திப்பிரிவு

இமாசலப் பிரதேசம், உத்திரா கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசின் சிறப்புச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். இந்த இரு மாநிலங்களுக்கு முதலீட்டில் மானிய சலுகை, சரக்குக் கட்டண சலுகை ஆகியன 2017-ம் ஆண்டு அதாவது 12-வது ஐந்தாண்டு திட்டகாலம் முடியும் வரை நீட்டிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இவ்விரு மாநிலங்களில் தொழில் வளம் பெருக வேண் டும் என்பதற்காக சிறப்புச் சலுகையை 2003-ம் ஆண்டு அரசு அறிவித்தது. இந்த சலுகை 2007ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. பின்னர் 2010-ம் ஆண்டில் இச்சலுகை தொடர்ந்தது. இப்போது இச்சலுகை 2017 வரை தொடரும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

2003-ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை இமாசலப் பிரதேசத்தில் மத்திய அரசின் முதலீட்டு மானிய சலுகை காரணமாக முதலீடுகள் அதிகரித்த தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மருந்து தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் பேக்கேஜிங் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் பெருகின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

46 mins ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்