புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம்: ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்தைத் தாண்டியது; என்ன காரணம்?

By செய்திப்பிரிவு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், சென்னையில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.464 அதிகரித்து, ரூ.26ஆயிரத்து 168-க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச அளவில் நேற்று திடீரென தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்றும் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களில் ஒரு பவுனின் விலை ரூ.992 அதிகரித்துள்ளது.

காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26 ஆயிரத்து 168-க்கு விற்கப்படுகிறது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 271-க்கு விற்கப்படுகிறது. இதுவே, நேற்று ரூ.3 ஆயிரத்து 213-க்கு விற்கப்பட்டது.

அதேபோல 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.27 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது.  அதேபோல வெள்ளியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

என்ன காரணம்?

அமெரிக்க மைய வங்கி  இந்த ஆண்டில் வட்டியைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க -சீனா வர்த்தகப் போரால் உலகப் பொருளாதாரம் மந்தகதியில் இருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது ஆகிய காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளன.

இதனால்தான் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்