ஹூவாய் நிறுவன அதிபருடைய மகளும், ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியுமான மெங் வான்ஜோவுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது பொருளாதார தடை நடவடிக்கையை அமெரிக்க அரசு எடுத்துள்ள நிலையில், அந்தவிதிமுறைகளை மீறி, ஹூவாயின் துணை நிறுவனமான ஸ்கைகாம் ஈரானில் தொழில் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சீன அரசுக்கு இவர் உளவாளியாகச் செயல்பட்டு தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும், இதுகுறித்து பல முறை எச்சரிக்கை செய்திருப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
மெங் வான்ஜோ மீது இந்தக்குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்திய நிலையில், கனடாவில்இவர் கைதுசெய்யப்பட்டார். மேற்சொன்ன குற்றச்சாட்டுகளின் பேரில் இவருக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளையும் கனடா அரசு எடுத்து வருகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
7 mins ago
விளையாட்டு
14 mins ago
ஜோதிடம்
43 mins ago
தமிழகம்
33 mins ago
விளையாட்டு
52 mins ago
சினிமா
53 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago