ஒடிசாவில் டாடா ரூ.100 கோடி முதலீடு

By செய்திப்பிரிவு

டாடா குளோபல் பிவரேஜஸ் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பில் ஒடிசா மாநிலத்தில் டீ பேக்கிங் ஆலை அமைக்க உள்ளது. அம்மாநி லத்தில் உள்ள டாடா ஸ்டீல் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இந்த ஆலை அமைய உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்தியில் கூறியுள் ளதாவது,

ஒடிசாவில் அமைந்துள்ள டாடா ஸ்டீஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ.100 கோடி முதலீட்டில் டீ பேக்கிங் ஆலை அமைக்க உள்ளோம். இதற்கான அனுமதி கடிதத்தினை டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா ஸ்டீல் எஸ்இஇஸட்க்கு அனுப்பியுள்ளோம். கோபால்பூர் தொழில்துறை பூங்காவில் இந்த ஆலை அமையும் என்று குறிப்பிட் டுள்ளது.

நிறுவனம், பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் இந்த தகவலைக் கூறியுள்ளது. இந்த ஆலை தொடங்குவதற்கு சுமார் ரூ.100 கோடியை இரு நிறுவனங் களும் செலவிட உள்ளன.

இந்த ஆலை ஆண்டுக்கு 3.6 கோடி கிலோ டீ பேக்கிங் செய் யும் திறன் கொண்டதாக இருக்கும். இதற்கான அனைத்து அனுமதிக ளும் கிடைத்த பின்னர் 2020-ம் ஆண்டிலிருந்து ஆலை செயல்படத் தொடங்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆலையில் டீ உற்பத் தியுடன், சேமிப்பு கிடங்கு வசதி கள் இருக்கும். மேலும் தங்களின் துணை நிறுவனங்கள், கூட்டு நிறு வனங்களின் தயாரிப்புகளுக்கும் அனுமதிக்கப்படும். புவனேஸ் வரில் நடைபெற்ற `மேக் இன் ஒடிசா’ முதலீட்டாளர் மாநாட் டில் இதற்கானபுரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள் ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்