கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது. இதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்தது.
இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் ரூபாய் மதிப்பில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாக தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
இதனுடன், திருமணம் மற்றும் தீபாவளி சீசன் தொடங்கியுள்ளதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்றைய விலையை ஒப்பிடுகையில் பவுனுக்கு 288 ரூபாய் உயர்ந்து 24 ஆயிரத்து 456 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் நேற்றைய விலையில் இருந்து 36 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 57 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
15 mins ago
சினிமா
28 mins ago
விளையாட்டு
34 mins ago
சினிமா
40 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
46 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago