நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி விகிதம் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. இதில் முதல் காலாண்டு வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கிறது. இது கடந்த ஒன்பது காலாண்டுகளாக இல்லாத வளர்ச்சியாகும். கடந்த வருடம் இதே காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி 4.7 சதவீதமாக இருந்தது.
இதற்கு முந்தைய காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 4.6 சதவீத வளர்ச்சி இருந்தது.விவசாயத்துறையின் வளர்ச்சி 3.8 சதவீதமாக இந்த ஜூன் காலாண்டில் இருந்தது.
சந்தை எதிர்பார்ப்புகளை விட சிறப்பாக ஜூன் காலாண்டு ஜிடிபி வந்திருக்கிறது. மூடிஸ் நிறுவனம் 5.1 சதவீதமாக இருக்கும் என்றும், மார்கன் ஸ்டான்லி 5.6 சதவீதம் என்றும், நொமுரா அதிகபட்சமாக 5.9 சதவீதம் என்றும் கருத்து தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
ஜிடிபி முடிவுகள் சிறப்பாக வந்திருப்பதால் திங்கள்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிப்டி 8000 புள்ளிகளை தொட வாய்ப்பு இருக்கிறது என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
வாழ்வியல்
4 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago