தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவுக்கு கொண்டு வரப்பட் டால் அவர் அடைக்கப்பட உள்ள சிறைச்சாலை அறையின் வீடியோ காட்சிகளை சிபிஐ போலீஸார் லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறு வனத்துக்காக பெற்ற வங்கிக் கடனை திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்து தப்பி ஓடிவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லை யாவை இந்தியாவுக்கு அழைத்து வர சிபிஐ முயற்சிகள் மேற் கொண்டுள்ளது.
இந்திய சிறைச்சாலைகளில் போதிய வசதிகள் கிடையாது, தனது கட்சிக்காரர் மிக மோசமாக நடத்தப்படுவார் என்று விஜய் மல்லையா தரப்பு வழக்கறிஞர் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இந்திய சிறைச்சாலைகளின் தன்மை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக மும்பை ஆர்தர்ரோடு சிறைச்சாலையில், சிறைச்சாலை அறை எண் 12-ல் உள்ள வசதி கள் குறித்த வீடியோ பதிவு செய்யப்
பட்டது. 10 நிமிட நேரம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில் அந்த அறையில் உள்ள டிவி செட், தனியான கழிப்பிட வசதி, இயற்கையான சூரிய ஒளி அந்த அறைக்குள் வருவது போன்ற அமைப்பு, அவர் நூலகம் சென்று படிப்பதற்கான வசதிகள், நடை பயிற்சிக்கான இட வசதி குறித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்திய சிறைச்சாலைகளின் சுகாதாரத் தன்மை, அதில் அளிக் கப்படும் வசதிகள் குறித்த விவரங் களை அளிக்குமாறு வெஸ்ட்மின்ஸ் டர் நீதிமன்றம் கேட்டிருந்தது. கிழக்கு முகமாக அமைந்துள்ள இந்த சிறைச்சாலை அறையில் சூரிய ஒளி போதிய அளவுக்கு வருவதும் வீடியோ காட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக ஆர்தர்ரோடு சிறைச்சாலை எண் 12 அறையில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மிக முக்கிய குற்றவாளிகள் மட்டுமே அடைக்கப்படுவர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
54 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago