முன்தேதியிட்ட வரி பாக்கியை வசூலிக்க வருமான வரித்துறையினர் கெய்ர்ன் நிறுவத்தின் பங்குகளில் பகுதியளவை விற்றுள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ 1,441.48 கோடி (21.60 கோடி டாலர்) தொகை அரசுக்கு கிடைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் எண்ணெய் துரப்பணப் பணியில் ஈடுபட்டுள்ளது கெய்ர்ன் நிறுவனம். இதை சமீபத்தில் வேதாந்தா குழுமம் வாங்கியது.
வேதாந்தா நிறுவனம் வாங்குவதற்கு முன்பே வரி பிரச்சினையை கெய்ர்ன் நிறுவனம் எதிர் கொண்டது.
பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் பிஎல்சி நிறுவனத்தின் இந்திய நிறுவனமாக கெய்ர்ன் இந்தியா செயல்பட்டது. தனி நிறுவனமாக மாறும்போது தாய் நிறுவனத்துக்கு பங்குகள் அளிக்கப்பட்டன. இவ்விதம் பங்கு மாற்றல் செய்தபோது அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. கெய்ர்ன் நிறுவனம் மொத்தம் ரூ 10,247 கோடி வரி செலுத்த வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வரி நிலுவைக்காக வரித்துறை வசம் உள்ள பங்குகளில் 40% விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனையைத் தொடர்ந்து வேதாந்தா குழும நிறுவனத்தில் கெய்ர்ன் நிறுவனம் 3% பங்குகளை வைத்துள்ளது. இதனால் வருமான வரித்துறை அதன் வசம் உள்ள 60% பங்குகளையும் விற்பனை செய்யும்.-பிடிஐ
முக்கிய செய்திகள்
வணிகம்
11 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
21 mins ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
45 mins ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
48 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
2 hours ago