சென்னைக்கு அருகிலுள்ள வல்லம்-வடகல் தொழிற்பூங்காவில் ரூ.210 கோடி முதலீட்டில் ஆட்டோமொபைல் பொருட்கள் தயாரிப்பு ஆலையொன்றை அமைக்க இருப்பதாக ஃபிரூடென்பெர்க் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்த ஆலை முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்று நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ஜார்க் கிராஃப் கூறினார்.
ஜெர்மனியைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் 2017-ம் ஆண்டு ஒட்டுமொத்த விற்பனை அதன் முந்தைய ஆண்டைவிட 18.3 சதவீதம் அதிகரித்து ரூ.68,959 கோடியாக உள்ளது. 2017-ம் ஆண்டு இந்திய அளவில் இந்த நிறுவனத்தின் விற்பனை முந்தைய ஆண்டைவிட 25 சதவீதம் அதிகரித்து ரூ.2,768 கோடியாக உள்ளது. ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக ரூ.3,157 கோடியை இந்த நிறுவனம் ஒதுக்கியுள்ளது. ஆட்டோமொபைல், மருத்துவம் போன்ற பல்வேறு துறை சார்ந்த தொழில்நுட்ப உபகரணங்களையும், சேவைகளையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தொழில்நுட்பம்
4 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
7 hours ago