கடந்த நிதி ஆண்டில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 28 சதவீதம் உயர்ந்து ரூ.1,563 கோடியாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் ரூ.1,223 கோடி அளவுக்கு மட்டுமே நிகர லாபம் இருந்தது. நிறுவனத்தின் வருமானம் 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.20,140 கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.26,248 கோடியாக இருக்கிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.
கடந்த நிதி ஆண்டு மிக சிறப்பானதாக இருந்தது. வாகன விற்பனை சந்தையில் 32 சதவீதம் அளவுக்கு தங்கள் வசம் இருப்பதாக நிர்வாக இயக்குநர் வினோத் தாசரி தெரிவித்தார். எங்களது வட இந்திய விற்பனை 20 சதவீதம் அளவுக்கு மட்டுமே வளர்ந்திருக்கிறது. ஆனால் மொத்த விற்பனையில் 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கும் தென் இந்தியா சந்தை ஆறு சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது என்று தாசரி கூறினார்.
மார்ச் காலாண்டில் நிகர லாபம் 40 சதவீதம் அளவுக்கு உயர்ந்து ரூ.667 கோடியாக இருக்கிறது. வருமானம் 32 சதவீதம் அளவுக்கு உயர்ந்து ரூ.8,772 கோடியாக இருக்கிறது.
கடந்த நிதி ஆண்டு முடிவில் ரூ.3,000 கோடி அளவுக்கு உபரி தொகை இருக்கிறது. தவிர 20 ஆண்டுகளுக்கு பிறகு எங்களுடைய தரமதிப்பீடு `ஏஏ+’ என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கோபால் மகாதேவன் கூறினார். நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒர் பங்குக்கு ரூ. 2.43 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இந்த பங்கு 3.8% சரிந்தது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
4 hours ago
உலகம்
4 hours ago