ரிசர்வ் வங்கியின் முதல் தலைமை நிதி அதிகாரியாக சுதா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது என்எஸ்டிஎல் நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். இவருக்கு செயல் இயக்குநருக்கான அதிகாரம் இருக்கும்.
ரிசர்வ் வங்கியில் நிர்வாக ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் இவரைக் கொண்டு வந்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. நிதிச் சார்ந்த தகவல்களை ரிசர்வ் வங்கிக்கு அளிக்க வேண்டியது தலைமை நிதி அதிகாரியின் பொறுப்பாகும். கணக்கியல் கொள்கைகளை வெளியிடுவது முறையீடுகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உறுதி செய்வதும் தலைமை நிதி அதிகாரியின் பணியாகும்.
ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பு, தற்போதைய நிதி நிலைமை மற்றும் பட்ஜெட் நடைமுறைகளை கண்காணிப்பது போன்றவையும் தலைமை நிதி அதிகாரியின் பொறுப்பாக இருக்கும். -பிடிஐ
முக்கிய செய்திகள்
க்ரைம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
வாழ்வியல்
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஓடிடி களம்
13 hours ago