சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 41-வது ஆண்டு வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு வணிக அமைப்புகள் முக்கிய நகரங்களில் மாநாடுகளை நடத்துகின்றன.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரையிலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவையிலும் இன்று வணிகர் தின மாநாடுகளை நடத்துகின்றன. இதில் லட்சக் கணக்கான வணிகர்கள் பங்கேற்பதால், தமிழகம் முழுவதும் இன்று கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
சென்னையிலும் பெரும்பாலான மளிகை மற்றும் காய்கறி கடைகள் மூடப்படும் என்பதால், கோயம்பேடு காய் கறி சந்தைக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், மலர் மற்றும் கனி அங்காடிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 mins ago
ஜோதிடம்
18 mins ago
தமிழகம்
34 mins ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
8 hours ago
கல்வி
9 hours ago
தமிழகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
9 hours ago