பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி: பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவு

By செய்திப்பிரிவு

மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தை சார்ந்த நீண்டகால முதலீடு ஆதாயத்திற்கு வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்தன.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தை சார்ந்த ஒராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டு ஆதாயத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வரியின் மூலம் அரசுக்கு கூடுதலாக 20,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த வெள்ளியன்று இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. இதுமட்டுமின்றி நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என பட்ஜெட் தகவலும் பங்குசந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பங்குச்சந்தைகளில் சரிவு இன்றும் தொடர்ந்தது. மும்பை பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியவுடன், குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவடைந்தது. 545 புள்ளிகள் சரிந்து 34,530 புள்ளிகளாக சரிந்தது.

இதுபோலேவ தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டு எண்ணான நிப்டி 173 புள்ளிகள் சரிந்து 10,586 புள்ளிகளாக வர்த்தகமானது.

யெஸ் பாங்க், எச்டிஎப்டி லிமிடெட், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, ஹீரோ மோட்டார், பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல் எல் அண்ட் டி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங பங்குகள் அதிகம் சரிவு கண்டன.

எனினும் பின்னர் சற்று சீரடைந்த நிலையில் வர்த்தகமாகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்