ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்படும் இன்றைய மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு சில எதிர்பார்ப்புகள் உள்ளன.
2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, அருண் ஜேட்லி தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும். மேலும் இந்த அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு அளவிலான பட்ஜெட் இதுவாகும். 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் எதிர்பார்ப்பு என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.
*. 2015-ல் இருந்து கிடப்பில் போடப்பட்டிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை. தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கு அமையும் என்ற அறிவிப்பு.
* மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு.
* சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான வெள்ள மேலாண்மை திட்டம்
* சென்னை - தூத்துக்குடி இடையேயான சரக்கு ரயில் பாதை
* சென்னை - மதுரை- கன்னியாகுமரி இடையேயும் மதுரை - கோவைக்கும் இடையேயான பயணிகள் ரயில் திட்டம்
* கன்னியாகுமரியில் ஒருங்கிணைக்கப்பட்ட துறைமுகம். அதில் மீன் பதப்படுத்தும் மையமும் அமைத்தல்.
* கோயம்பேடு - பூந்தமல்லி- வாலாஜாபேட் இடையே ரூ.1500 கோடி மதிப்பிலான 6 வழிப்பாதைக்கு நிதி ஒதுக்கீடு.
* ரூ.7446 கோடி செலவில், சென்னை ரிங் ரோடு திட்டத்துக்கான அனுமதி.
* தேசிய நெடுஞ்சாலை 45-ஏ மேம்படுத்துதல். அதை 4 வழிப்பாதையாக மாற்றுதல்.
* தேசிய நெடுஞ்சாலையில் ரூ.2,300 கோடி செலவில் சாலை பாதுகாப்பு திட்டம்.
* கோதாவரி- பாலாறு- பென்னாறு- காவிரி நதி நீர் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு. கோதாவரி உபரி நீரை தமிழகத்துக்கு திருப்பிவிடுதல்
* நாகை - கன்னியாகுமரி இடையேயான சாலையை மேம்படுத்துதல்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
வணிகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
இணைப்பிதழ்கள்
9 hours ago
க்ரைம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago