அரூர்: தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள வட சந்தையூரில் வாரந்தோறும் புதன்கிழமை சந்தை கூடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை வருவதையொட்டி நேற்று கூடிய சந்தையில் விற்பனை களைகட்டியிருந்தது.
ஏராளமான ஆடுகள் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளை விற்கவும், வாங்கவும் ஏராளமான விவசாயிகள்,பொதுமக்கள், வெளியூர், உள்ளூர் வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று அதிகாலை முதல் நடந்த ஆட்டுச் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த அனைத்து ஆடுகளும் வெகு விரைவில் விற்பனையாகின.
வளர்ப்பு குட்டிகள் ரூ.3 ஆயிரம் முதல் விற்பனையானது. வளர்ந்தஆடுகள் ரூ.10 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் வரை விற்பனையானது. சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.1.50 கோடி அளவிற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
விளையாட்டு
24 mins ago
தமிழகம்
32 mins ago
சினிமா
54 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago