15 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லரை பணவீக்கம் 4.88% ஆக உயர்வு: ஆர்பிஐ நிர்ணயித்த இலக்கை தாண்டியது

By செய்திப்பிரிவு

நுகர்வோர் பணவீக்கம் அல்லது சில்லரை பணவீக்கம் நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில் 4.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நுகர்வோர் பணவீக்கம் 3.63 சதவீதமாக இருந்தது. மத்திய அரசு வெளியிட்ட பணவீக்க விவர அறிக்கையில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

நுகர்வோர் பணவீக்கம் 4 சதவீத அளவுக்குக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கைக் கடந்து தற்போது பணவீக்கம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உணவுப் பொருள் விலை உயர்வில் எதிரொலித்தது.

பொருளாதார நிபுணர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி கணிப்பின்படி பணவீக்கம் 4.20 சதவீத அளவுக்கு இருக்கும் என கூறப்பட்டது. ரிசர்வ் வங்கியும் தனது நிதிக் கொள்கை அறிக்கையில் அடுத்த இரண்டு காலாண்டுகளில் பணவீக்கம் 4.3 சதவீதம் முதல் 4.7 சதவீத அளவுக்கு இருக்கும் என திருத்தி அமைத்தது. இருப்பினும் அதையும் விட தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது.

உணவுப் பொருள்களின் கடுமையான விலை உயர்வே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. உணவு பணவீக்கம் 4.42 சதவீதமாக உள்ளது. அக்டோபர் மாதத்தில் இது 1.90 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடுமையான மழை காரணமாக தக்காளி,வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது.

அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டது, கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியன பண வீக்கத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மூலப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்துறை உற்பத்தி சரிவு

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி அக்டோபர் மாதத்தில் 2.2 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் உற்பத்தி 3.8 சதவீத அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. உற்பத்தித் துறை 2.5 சதவீதமும், மூலதன சரக்கு உற்பத்தி துறை 6.8 சதவீத அளவுக்கும் உயர்ந்துள்ளது. கட்டமைப்பு மற்றும் கட்டுமானத்துறை பொருள்கள் 5.2 சதவீத அளவுக்கு வளர்ச்சியை சந்தித்துள்ளன.

மருந்து, மருந்து ரசாயனம், தாவரவியல் பொருள் தயாரிப்புகள் 23 சதவீத பங்களிப்பை அளிக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக ஆட்டோமொபைல் உற்பத்தித்துறை 12.8 சதவீத பங்களிப்பை அளிக்கின்றன. தங்க நகை, புகையிலை சார்ந்த பொருள் உற்பத்தி, ரப்பர், பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளது. சுரங்கத்தொழில் 0.2 சதவீத வளர்ச்சியையும், மின்னுற்பத்தி 3.2 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்