ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடியை பேங்க் ஆப் இந்திய கடனாக வழங்கி இருக்கிறது. கடன் பிரச்சினையில் சிக்கி இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் அவசர கால மற்றும் தினசரி தேவைகளுக்காக இந்த கடன் வழங்கப்பட்டிருக்கிறது.
சமீபகாலங்களில் ஏர் இந்தியா நிறுவனம் பொதுத்துறை வங்கிகளில் மூலமாக பெறும் இரண்டாவது கடன் இதுவாகும். இந்த கடன் குறித்து பேங்க் ஆப் இந்தியா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் இண்டஸ்இந்த் வங்கி மற்று பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரு வங்கிகள் இணைந்து ரூ.3,250 கோடியை ஏர் இந்தியாவுக்கு கடனாக வழங்கின. இந்த தொகையும் அவசர கால மற்றும் தினசரி தேவைகளுக்காக பெறப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.50,000 கோடிக்கு மேல் கடன் இருக்கிறது. இந்த நிலையில் பங்குகளை விற்பது, முக்கியமில்லாத சொத்து விற்பனை உள்ளிட்ட பல நடவடிக்கைகளை ஏர் இந்தியா பரிசீலனை செய்து வருகிறது. ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் உதவியுடன் இயங்கி வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏர் இந்தியாவை மீட்பதற்காக ரூ.30,231 கோடி நிதி வழங்கியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
19 mins ago
ஓடிடி களம்
33 mins ago
க்ரைம்
51 mins ago
ஜோதிடம்
49 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
54 mins ago
இந்தியா
58 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
ஓடிடி களம்
2 hours ago