மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் லாபத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 350 புள்ளிகள் (0.56 சதவீதம்) உயர்வடைந்து 63,142 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி127 புள்ளிகள் (0.68 சதவீதம்) உயர்ந்து 18,726 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:58 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 101.20 புள்ளிகள் உயர்வடைந்து 62,894.08 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 48.85 புள்ளிகள் உயர்ந்து 18,647.85 ஆக இருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில், ஹெவிவெயிட் பங்குகளின் கடைசி நேர விற்பனை எழுச்சி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றத்தில் நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 350.08 புள்ளிகள் உயர்வடைந்து 63,142.96 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 127.40 புள்ளிகள் உயர்ந்து 18,726.40 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, பாரதி ஏர்டெல், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டிசிஎஸ், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மகேந்திரா, டைட்டன் கம்பெனி, இன்போசிஸ், ஆக்சிஸ் பேங்க், விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. கோடாக் மகேந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
க்ரைம்
26 mins ago
தமிழகம்
29 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
44 mins ago
ஆன்மிகம்
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கல்வி
1 hour ago
மாவட்டங்கள்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago