கறி வெட்டியும், நெசவு நெய்தும் வாக்கு சேகரித்த பரமக்குடி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர்

By கி.தனபாலன்

பரமக்குடியில் அதிமுக வேட்பாளர் என். சதன் பிரபாகர் கறிக்கடையில் கறி வெட்டியும், நெசவு நெய்தும் வினோதமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் என்.சதன் பிரபாகர் இன்று பரமக்குடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பரமக்குடி நகர் சின்னக்கடை தெருவில் உள்ள புரோட்டா கடையில் கொத்து புரோட்டா செய்தும், அதை கடை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியும், பின்பு மட்டன் கடையில் கறி வெட்டி வாடிக்கையாளருக்கு வழங்கி வினோதமான முறையில் வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நெசவாளர் குடும்பத்தில் நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அந்நேரம் நெசவாளர்களின் குடும்ப உறுப்பினராக அவர்களுடன் இணைந்து நெசவுத்தறி நெய்து வாக்கு சேகரித்தார். இதுபோன்று அதிமுக வேட்பாளர் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது அப்பகுதியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இவர் நேற்று பரமக்குடி வைகை நகர் பகுதியில் பொதுமக்களுடன் ஆடிப் பாடியும், மேளம் அடித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது அனைவராலும் பேசப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.வாக்கு சேகரிப்பின்போது அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

ஓடிடி களம்

4 mins ago

விளையாட்டு

19 mins ago

சினிமா

21 mins ago

உலகம்

35 mins ago

விளையாட்டு

42 mins ago

ஜோதிடம்

24 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்