டெல்லி முனிசிபல் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி முன்னிலை

By ஏஎன்ஐ

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் இடைத்தேர்தலில் 5 வார்டுகளில் 4ல் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது.

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட 5 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. ஆரம்பம் முதலே ஐந்தில் 4 வார்டுகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது.

ஷாளிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோஹினி சி உள்ளிட்ட 4 வார்டுகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சவுஹான் பாங்கார் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

ஏற்கெனவே இந்த 5 வார்டுகளில் 4 ஆம் ஆத்மி வசமே இருந்தது. ஷாளிமார் பாக் மட்டும் பாஜகவசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தல் முடிவு இன்று பிற்பகலில் முழுமையாகத் தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்