டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் இடைத்தேர்தலில் 5 வார்டுகளில் 4ல் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது.
டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட 5 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. ஆரம்பம் முதலே ஐந்தில் 4 வார்டுகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது.
ஷாளிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோஹினி சி உள்ளிட்ட 4 வார்டுகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சவுஹான் பாங்கார் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
ஏற்கெனவே இந்த 5 வார்டுகளில் 4 ஆம் ஆத்மி வசமே இருந்தது. ஷாளிமார் பாக் மட்டும் பாஜகவசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தல் முடிவு இன்று பிற்பகலில் முழுமையாகத் தெரியவரும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago