பிரான்ஸில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

By செய்திப்பிரிவு

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 19,952 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 19,952 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 122 பேர் பலியாகி உள்ளனர். பிரான்ஸில் இதுவரை 37,55,968 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 86,454 பேர் கரோனாவினால் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவைத் தடுக்க பிரான்ஸ் அரசு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதம் முடிவதற்குள் 40 லட்சம் பேர் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றிருப்பார்கள் என்றும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

உருமாறிய கரோனா வைரஸ்

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

28 mins ago

கல்வி

21 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

24 mins ago

ஓடிடி களம்

31 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்