தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி அன்று நடக்க உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். மே 2-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அவர் அறிவித்தார்.
இதன் எதிரொலியாக, திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைமை தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், 7.3.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டமும், 14.3.2021 அன்று திருச்சியில் நடைபெறுவதாக இருந்த ‘தி.மு.க.மாநில மாநாடும்’ ஒத்தி வைக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
52 mins ago
விளையாட்டு
43 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
3 hours ago