யோகி ஆட்சிக் காலத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் மகேந்திர சிங் தேரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று (பிப்ரவரி 24-ம் தேதி) நடைபெற்ற கூட்டத்தில் அம்மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான அஜய் குமார் லல்லு கலந்துகொண்டார்.
கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், ''பந்தேல்கண்ட் பகுதியில் நீர்ப்பாசன வசதிகள் சரியாக இல்லாததால் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் உள்ளது. ஏன், நேற்று கூட ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்'' என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ஜல் சக்தி அமைச்சர் மகேந்திர சிங், ''தலைவர்கள் என்று அழைக்கப்படும் நீங்கள்தான் ஏராளமான பொய்களைச் சொல்கிறீர்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் அதிகபட்சத் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. யோகி ஆதித்யநாத் ஆட்சிக் காலத்தில் ஒரு விவசாயி கூடத் தற்கொலை செய்துகொள்ளவில்லை'' என்று தெரிவித்தார்.
இதற்குக் காங்கிரஸ் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago