ஜப்பானில் புதிய வகை கரோனா

By செய்திப்பிரிவு

ஜப்பானில் புதியவகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் புதிய சவாலை ஜப்பான் அரசு எதிர் கொண்டுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் தேசிய சுகாதார அமைப்பு கூறும்போது, “ மூன்றாம் கட்ட கரோனா பரவலை இந்தியா எதிர் கொண்டுள்ள சூழலில் தலைநகர் டோக்கியோவில் புதியவகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. புதியவகை கரோனா அதிகம் பரவு தன்மை கொண்டது. இதன் காரணமாக டோக்கியோவில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் முதல் கட்டமாக சுமார் 40,000 சுகாதாரப் பணியாளர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 7-ம் தேதி வரை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 11 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்