அர்ஜென்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,739 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அர்ஜெண்டினா சுகாதாரத் துறை தரப்பில், “ அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,739 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,01,034 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவுக்கு நாடு முழுவதும் 49,674 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் அதிகப்படைந்த நாடுகளில் அர்ஜென்டினாவும் ஒன்று. சுகாதாரப் பணியாளர்களுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும். மேலும், நாட்டின் 23 மாகாணங்களுக்கு கரோனா தடுப்பு மருந்து கொண்டு செல்லப்படும் என்று அர்ஜென்டினா சில நாட்களுக்கு முன்னர் கூறியது.
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago