மரம் இருந்த இடம்

By மானா பாஸ்கரன்

அதன் நிழலில் உட்கார்ந்துதான்

கை மணிக்கட்டின் மேடுபள்ளங்களில்

விரல் ஊர வைத்து

ஜனவரி பிப்ரவரி மார்ச்சுக்கு

எத்தனை நாளென்கிற கணக்கை

என் மகனுக்கு சொல்லிக் கொடுத்தேன்.

*

என் விலாசத்தை விசாரிப்பவர்களிடம்

நேற்று வரையில்

‘அதோ

மரமிருக்கிற வீடுதான்’ என்று

அடையாளம் காட்டியவர்களால்

‘அதோ

மரமிருந்த வீடுதான்’ என்று

இனி சொல்ல முடியுமா?

*

சொந்த ஊருக்குப் போகும்போதெல்லாம்

போய்ட்டு வாரேனென்று

அதனிடம் சொல்லிச் செல்கிற

என் மனைவியிடம்கூட

சொல்லாமக் கொள்ளாமப் போய்விட்டது வாசல் மரம்.

*

குழிப் புண் மாதிரி கிடக்கிறது

மரமிருந்த மண்

அதன் ஆழங்களில்

எங்கள் வீட்டின் வேர்கள்.

யாராலும் நிரப்ப முடியாத

கோடிட்ட இடமாகிவிட்டது

எங்கள் தெரு.

*

எங்கள் வீட்டுக்கு வரும் லாண்டரி அண்ணனும்

எப்போதாவது வருகிற அஞ்சல்காரரும்

அதிகாலை பேப்பர் பையனும்

வீட்டு வாசலில் வெறுமையைத் துழாவினர்

அவர்களின் கண்களில்

உதிர்ந்தன

ஞாபகங்களின் இலைகள்.

*

மரத்தை அறுத்தால்

ஆண்டுவளையம் தெரியுமென்பார்கள்

இப்போது

எங்கள் மனசை அறுக்கிறது

எங்கள் மரத்தின் ஆண்டுவளையம்.

*

கிளைகளின் கதைசொல்லி காகங்களுக்கும்

செய்திகள் வாசித்த அணில்களுக்கும்

6, மூணாவது குறுக்குத் தெரு

பெரியார் நகர் என்பது

இனி, பழைய முகவரி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்