பளிச் பத்து 147: நூலகம்

By பி.எம்.சுதிர்

# உலகின் பழமையான நூலகம் ஈராக்கில் உள்ள அஸிரியா எனும் இடத்தில் கி.மு 630-ம்
ஆண்டில் செயல்பட்டதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
# ஹார்வர்ட் நூலகத்தில் மனிதத் தோலால் தைக்கப்பட்ட 3 புத்தகங்கள் உள்ளன.
# தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம், ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்றாகும். இந்நூலகம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது.
# அதிக நூலகங்களைக் கொண்ட நகரமாக போலந்தின் தலைநகர் வார்சா விளங்குகிறது.
இங்கு 10 ஆயிரம் பேருக்கு சராசரியாக 11 நூலகங்கள் உள்ளன.
# பண்டைக்காலத்தில் எகிப்து நாட்டுக்கு வரும் கப்பல்களுக்கு சொந்தமான அனைத்து புத்தகங்
களையும் அலெக்சாண்டிரியாவில் உள்ள நூலகத்துக்கு கொடுக்க வேண்டும் என்று விதி இருந்தது.
# நார்வேயில் வெளியிடப்படும் புத்தகங்களில், 1,000 பிரதிகளை அந்நாட்டு அரசே வாங்கி, நூலகங்களுக்கு அனுப்பிவைக்கும்.
# நார்வேயில் உள்ள நூலகங்களில் புத்தகத்தை எடுத்தால், அதை நாட்டின் எந்த மூலையில் உள்ள நூலகத்திலும் திருப்பிக் கொடுக்கலாம்.
# சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகம் 1890-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
# ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் நகரில் பூமிக்கு கீழே 16 அடி ஆழத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
# கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம்தான் இந்தியாவின் மிகப்பெரிய நூலகமாகும். இங்கு 22 லட்சம் புத்தகங்கள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

விளையாட்டு

27 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்