இலாசந்திர ஜோஷி 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

இந்தி இலக்கியத்தில் மனோதத்துவ நாவல்களின் ஆரம்பகர்த்தா எனக் கருதப்படும் இலாசந்திர ஜோஷி (Ilachandra Joshi) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l

உத்தராகண்ட் மாநிலம் அல்மோடாவில் (1903) பிறந்தார். அது இமயமலைப் பகுதி என்பதால், அதன் நீர்ப் பிரவாகங்கள், அருவிகள், நதிகளோடு கூடிய இயற்கை எழில் இளம் வயதிலேயே இவரது படைப்புத் திறனை விழிப்படையச் செய்தது.

* அறிவுக் கூர்மை, கற்பனை வளம் மிக்கவர். புராணங்கள், இதிகாசங்கள், காவியங்களை சிறு வயதிலேயே கற்றார். பல அறிஞர்களின் படைப்புகளையும் படித்தார். பள்ளிக் கல்வியில் பெரிதாக ஆர்வம் இல்லாததால், 10-ம் வகுப்போடு கல்வி முடிவுக்கு வந்தது.

* சுய முயற்சியில் பல மொழிகளைக் கற்றார். சிறிய வயதிலேயே எழுதவும் தொடங்கினார். முதல் கதை வெளிவந்தபோது இவருக்கு 12 வயது. 1929-ல் வெளிவந்த ‘கிருணாமயீ’ நாவல் இவருக்கு இலக்கிய உலகில் ஓரளவு அறிமுகம் பெற்றுத் தந்தது. 1940-ல் வெளியான ‘சன்யாசி’ நாவலால் பேரும் புகழும் பெற்றார்.

* கல்கத்தா சென்று, இவரது மனம்கவர்ந்த படைப்பாளியான சரத் சந்திர சட்டோபாத்யாவை சந்தித்தார். சில காலம் வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். கவிதை, விமர்சன நூல், கதைகள் என இலக்கியத்தின் அனைத்து பிரிவுகளிலும் முத்திரை பதித்தாலும், நாவல் ஆசிரியராகவே பிரபலம் அடைந்தார்.

* லஜ்ஜா, பர்தே கீ ராணி, முக்திபத், ஜிப்ஸி, சுபஹ், நிர்வாசித், பிரேத் அவுர் சாயா உள்ளிட்ட இவரது நாவல்கள் மிகவும் பிரசித்தம். தனது நாவல்கள் மூலம் சமூகத்தில் உயர்ந்த மதிப்பீடுகளை நிலைநிறுத்த முயற்சி செய்தவர். மனோதத்துவ யதார்த்தவாதம் இவரது நாவல்களின் அடிநாதமாகத் திகழ்ந்தது.

* இவரது படைப்புகளில் டால்ஸ்டாய், தஸ்தோயெஸ்கியின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இவரது படைப்புகள் வெளி உலகில் நடைபெறும் நிகழ்வுகளை விடுத்து ஆழ்மன உலகை நோக்கி வாசகர்களை திருப்பிவிடும் தன்மை கொண்டிருந்தன.

* மொழி, இலக்கியத்தில் ஆழ்ந்த ஞானம், ஈடுபாடு கொண்டவர். இந்தி இலக்கியத்துக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்கியவர். தன் கதைகளில் பெண்களின் நிலை, அவர்களது பிரச்சினைகள் குறித்து எழுதியதோடு அவற்றுக்கான தீர்வையும் வழங்கினார்.

* இவரது படைப்புகளின் நாயகர்கள் வீரதீர பராக்கிரமராக, சர்வ வல்லமை பெற்றவராக இல்லாமல், சாதாரண மனிதனுக்குரிய பலம், பலவீனங்களுடனே காணப்படுவார்கள். தூப்ரேகா, ஆஹுதி, கண்டஹர் கீ ஆத்மாயே உள்ளிட்ட கதைகள், ரவீந்திரநாத், சரத்: வ்யக்தி அவுர் சாகித்யகார் உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்கள், சாகித்ய சர்ஜன், சாகித்ய சிந்தன் போன்ற விமர்சன நூல்கள் இவரது முக்கியப் படைப்புகள்.

* ஜோஷிஜி, கல்கத்தா சமாச்சார், சாந்த், விஷ்வவாணி, சுதா, சமாலோசக் பத்ரிகா, தர்மயுக், சாகித்யகார் உட்பட பல பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார். குழந்தை இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

* இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட. தாகூரின் படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்தார். வங்க மொழி, ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இந்தி இலக்கிய உலகின் தலைசிறந்த படைப்பாளியாகப் போற்றப்பட்ட இலாசந்திர ஜோஷி 79-வது வயதில் (1982) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்