கோப்பெர்ட் மெயர் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நோபல் பெற்ற ஜெர்மன் இயற்பியலாளர்

நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் கணித இயற்பியலாளர் மரியா கோப்பெர்ட் மெயர் (Maria Goeppert Mayer) பிறந்த தினம் இன்று (ஜூன் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியின் ஒரு பகுதியாக விளங்கிய பிரஷ்யாவின் கட்டோ விஸ் நகரில் (தற்போதைய போலந்து) 1906-ல் பிறந்தார். தந்தை கோட்டின்ஜென் பல் கலைக்கழகப் பேராசிரியர். சிறு வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கிய மரியா, கணித வல்லுநராக விரும்பினார்.

* நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று கோட்டின்ஜென் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். மெல்ல இயற்பியல் மீது ஆர்வம் திரும்பியது. கல்லூரியில் மேக்ஸ் பார்ன், ஜேம்ஸ் பிராங்க் உள்ளிட்ட நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்கள் ஆசிரியர்களாக அமைந்தது இவருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

* திருமணத்துக்குப் பிறகு 1930-ல் அமெரிக்காவில் குடியேறினார். மேக்ஸ் பார்ன் வழிகாட்டுதலில் கோட்பாட்டு இயற்பியலில் ஆய்வுகளை மேற்கொண்டார். ‘ஃபோட்டான்களின் உள்ளீர்ப்பு’ குறித்த கோட்பாடுகளை வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில் ஃபோட்டான்களின் குறுக்குப் பரப்பின் அலகு, ‘ஜி.எம். அலகு’ என்று இவரது பெயரால் குறிப்பிடப்பட்டது.

* தகுதிகள் இருந்தும் பெண் என்பதால் விரிவுரையாளர் பணி மறுக்கப்பட்டது. ஆனாலும், ஆய்வு மேற்கொள்வதற்காகவே சம்பளம் வாங்காமல் பணிபுரிய முன்வந்தார். எட்வர்டு டெல்லருடன் இணைந்து பல ஆய்வுகளில் ஈடுபட்டார். ஜெர்மனி திரும்பியவர், மேக்ஸ் பார்னுடன் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* ஜெர்மனி உலகப் போருக்குத் தயாரானபோது நாட்டைவிட்டு வெளியேறி, அமெரிக்கா சென்று குடியுரிமை பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு அணு ஆயுதங்கள் செய்வதற்கான ரகசிய ஆய்வுகள் நடந்தன. அதில் முக்கியப் பங்கு வகித்தார்.

* கணவருடன் இணைந்து இயந்திரவியல் பற்றிய பாடநூலை எழுதினார். சாரா லாரன்ஸ் கல்லூரியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அறிவியலாளர் ஹெர்ஸ்ஃபெல்ட் மற்றும் கணவரின் உதவியுடன் வேதி இயற்பியல் துறையில் ஆய்வுகளில் ஈடுபட்டு, பல கட்டுரைகளை வெளியிட்டார்.

* கரிம மூலக்கூறு நிறங்கள் பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். ஹெரால்டுடன் இணைந்து யுரேனிய ஐசோடோப்களைப் பிரிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் அணுக்கரு பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றினார். அர்கோன் தேசிய ஆய்வுக்கூடத்தில் பகுதிநேர ஆய்வாளராகவும் பணியாற்றினார்.

* எட்வர்டு டெல்லருடன் இணைந்து விண்வெளியில் சிறுவெடிப்பு பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அப்போது, அணுக்கரு கூடு அமைப்பின் மாதிரியை உருவாக்கினார். இதற்காக 1963-ல் ஜென்சன், பால் வைனர் ஆகிய இருவருடன் இணைந்து இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* மேஜிக் எண்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஜென்சனு டன் இணைந்து அணுக்கரு கூடு குறித்த நூலை எழுதினார். கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியராக 1960-ல் நியமிக்கப்பட்டார். பல அறிவியல் அமைப்புகளில் உறுப்பினராகச் செயல்பட்டார். இவரை கவுரவித்து அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன.

* பெண்களுக்கான கல்வி, பணி, ஆராய்ச்சி போன்ற வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலகட்டத்திலும், விடாமுயற்சியுடன் உழைத்து, அறிவியல் உலகில் தனியிடம் பிடித்த மரியா கோப்பெர்ட் மெயர் மாரடைப்பால் 66-வது வயதில் (1972) காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

இந்தியா

39 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

48 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்