மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:
ராசியில் புதன், குரு, சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலை அமைந்திருக்கிறது.

பலன்:
இந்த வாரம் பேச்சின் இனிமை சாதுர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள்.

அக்கம்பக்கத்தினரிடம் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பங்குதாரர்கள் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலகப் பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

பிள்ளைகள் உங்களது கருத்துகளைக் கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். பெண்களுக்கு சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.


கலைத்துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தைச் சிதற விடாமல் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
பரிகாரம்: விநாயகபெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க காரியத் தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.
***********************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
ராசியில் சூர்யன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது - விரய ஸ்தானத்தில் புதன், குரு, சனி என கிரக நிலை அமைந்திருக்கிறது.

பலன்:
இந்த வாரம் பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியைத் தரும்.

எதிரிகளால் இருந்து வந்த பிரச்சினை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகப் பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். மகிழ்ச்சி நீடிக்கும்.

பிள்ளைகள் தொடர்பான காரியங்களைச் செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். பெண்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகும்.
கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களைப் பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மேலிடம் கூறுவதைக் கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது உடல் ஆரோக்கியத்தை தரும். குடும்பப் பிரச்சினை தீரும்.
*****************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன், குரு, சனி - விரய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் என கிரக நிலை அமைந்திருக்கிறது.

பலன்:
இந்த வாரம் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும்.

மற்றவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தைத் தரலாம். கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் நீங்கும். பிள்ளைகளுக்குத் தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபடுவது என்றிருக்கும்.

பெண்களின் கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். மாணவர்களுக்கு எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியைத் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று குரு பகவானை முல்லை மலர் சாற்றி, நெய்தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

இந்தியா

23 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்