மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 4 முதல் 10ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும்.

முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். பல விஷயங்களில் மனநிறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம்.

போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.
வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள். பெண்களுக்கு தன்னம்பிக்கை ஓங்கும். கலைத்துறையினருக்கு முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் சின்ன விஷயங்களில் கூட கவனமாக ஈடுபடுவீர்கள்.

மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்துச் செல்வது சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: விநாயகருக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.
****************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:

ராசியில் ராகு - சப்தம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி - விரய ராசியில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது.

அதிக முயற்சிகள் செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்குக் கோபத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

நிதானம் தேவை. பெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும்.

அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: சிவபெருமானை வணங்க பொருளாதாரச் சிக்கல் தீரும். பண வரத்து கூடும். மனம் மகிழ்ச்சி உண்டாகும்.
********************

மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி - லாப ராசியில் செவ்வாய் - விரய ராசியில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும்.

அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள் காரிய தாமதத்தை உண்டாக்கும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது சிரமம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்காது. நிதானமாக நடக்கும்.

பணவரத்து தாமதப் படலாம். ஆர்டர்கள் தொடர்பாக வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம்.
கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கள் மனதில் தெளிவு உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு எதிலும் கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு நன்மைகள் ஏற்படும். மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது.

பரிகாரம்: முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்