துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள் - ஜனவரி 14 முதல் 20ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்

(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் அமைந்திருக்கின்றன.

இந்த வாரம் திடீர் கோபம் ஏற்படக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும்.
எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன்களைத் தரலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்குப் பிறகு கடினமான காரியங்கள் கூட கைகூடும். மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாகச் செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் வீண் பிரச்சினை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது.

பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது ஆறுதலைத் தரும். பெண்களுக்கு கோபகத்தை குறைத்துக் கொள்வது நன்மைகளைத் தரும்.
கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுர்யமாகப் பேசுவது நன்மைகளைத் தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நரசிம்மரை தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.
*************************

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

ராசியில் கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் அமைந்திருக்கின்றன.

இந்த வாரம் ராசிக்கு 3ல் கூட்டணி சஞ்சாரம் பலவகையான யோகத்தைத் தரும்.

மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களைத் தேடி வருவார்கள்.

அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.

எழுத்துத் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியைத் தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் நிதானமாகப் பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களைத் தள்ளிப்போடுவதும் நன்மைகளைத் தரும்.

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள்.

கலைத்துறையினருக்கு சந்தோஷமான மனநிலை இருக்கும். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். எல்லாப் பிரச்சினைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.
************************

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - விரய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும்.

எடுத்த காரியத்தைச் செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது.

அடுத்தவருக்குச் செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம். கவனமாகச் செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலைத் தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம்.

உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளைக் கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மைகளைத் தரும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்துச் செல்வது நல்லது. வழக்கு விவகாரங்களில் ஈடு படாமல் தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். கலைத்துறையினர் சொன்ன சொல்லை காப்பாற்றப் பாடுபட வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பணவரத்து தாமதப்படலாம். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: சிவபெருமானை தொடர்ந்து வணங்கி வாருங்கள். மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்