மகரம், கும்பம், மீனம்  - வார ராசிபலன்கள், டிசம்பர் 3 முதல் 9ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

இந்த வாரம் உங்கள் திறமையைக் கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள்.

திட்டமிட்டுச் செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம்.
பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். தடைபட்ட புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உல்லாசப் பயணங்கள் செல்ல நேரலாம். மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும்.

உங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமில்லாமல் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மேல் அதிகாரிகள் கூறிய படி காரியங்களைச் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

கலைத்துறையினர் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும்.

அரசியல்துறையினர் மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். சக நண்பர்கள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். மேலிடத்தின் கருத்துகளை நீங்களே முன்னின்று கேட்டு செயல்படுவதன் மூலம் பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

பெண்களுக்கு பண தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க வேண்டாம். தீர ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலம் சீராக இருக்கும். உடலில் அதிக உஷ்ணம் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

மாணவர்களுக்கு அதிக நேரம் பாடங்களைப் படித்து கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியை வணங்கினால், உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும்.
---------------------------------------

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.

எதைச் செய்தால் முன்னேறலாம் என்று யோசிக்கத் தோன்றும். நிதானமாக சிந்தனை செய்தும், பெரியவர்களின் ஆலோசனை கேட்டும் செயல்பட்டால் பல முக்கிய முடிவுகளையும், புதிய முதலீடுகளையும் செய்ய வழி பிறக்கும்.

உங்களின் இந்த பொன்னான காலகட்டத்தை நிதானமாக கையாளுவது நல்லது. சிறந்ததாகவும் அமையும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

குடும்ப உறுப்பினருக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இதனால் சிலர் ஆன்மீகச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

உடல்நலம் சீராக இருந்தாலும் ரத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

தொழில் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி அனுபவசாலிகளிடம் ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்கப் பெறுவார்கள். புத்திசாதுர்யத்தால் காரிய நன்மை பெறுவார்கள். கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும்.

அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.

பெண்களது செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். நண்பர்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்.

மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரம்: சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றிபெறும். துன்பங்கள் விலகும்.
---------------------------------------

மீனம். (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த வாரம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும்.

எல்லாவற்றிலும் நெருக்கடி நிலை காணப்படும். சொந்தக் காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும்போது கவனம் தேவை.

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தம்பதிகளிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு அதிகரிக்கும்.

பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். உடல்நலத்தில் எந்தவித பாதிப்பும் இருக்காது. ஏற்கெனவே இருக்கும் நோய்களில் இருந்தும் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தாமதம் இப்போது விலகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். கலைத்துறையினருக்கு தொழிலில் பிரச்சினைகள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும்.

எதிலும் நிதானத்துடன் நடந்து கொண்டால் தொல்லைகள் இருக்காது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

அரசியல்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொகுதி வேலையில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும்.

மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து கல்வியில் வெற்றி பெற நன்கு படிப்பீர்கள்.

பரிகாரம்: நவக்கிரகங்களை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக் குழப்பம் நீங்கும்.
--------------------------------------------------------------

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்