மேஷம், ரிஷபம், மிதுனம் - வார ராசிபலன்கள், டிசம்பர் 3 முதல் 9ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் முயற்சிகள் அனைத்தும் வேகம் பெறும்.

எதையும் சரியாக கணித்துச் சொல்வதில் வல்லவராக இருப்பீர்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பண வரவு இருக்கும். சேமிப்பும் அதிகமாகும். மற்றவர்களுக்காக உதவி செய்யும்போது அவர்களின் தேவை அறிந்து செய்வது நல்லது.

உடல் சோர்வு ஏற்படலாம். கவனம் தேவை. குடும்பத்தில் இதுவரை இருந்த கருத்து வேறுபாடுகள் மாறும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் - மனைவி இடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப்பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலத்தைப் பொறுத்தவரை மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம். உடற்பயிற்சியால் அதனைத் தவிர்க்கலாம். கவனம் தேவை.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு கிடைத்து தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கண்முன் தோன்றும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட காரியங்கள் சுமுகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு வாக்குவன்மையால் சில வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். துறையில் உயர்ந்தவர்களிடம் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதுர்யத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அரசியல் துறையினர் எடுக்கக் கூடிய ஒப்பந்தங்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு காரியங்களில் முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் மெத்தனம் காணப்படும். கல்வியில் வேகம் காட்டுவது வெற்றிக்கு நல்லது.

பரிகாரம்: முருகப் பெருமானை வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும்.
-------------------------------------------------------------

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

இந்த வாரம் மனதில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். லாபம் கிடைக்கும்.

உங்கள் தீவிர முயற்சியால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனைகள் உண்டாகும். அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களின் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படும். எனவே பேசும் போது கவனமுடன் இருக்கவும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். குடும்பத்தில் சிலர் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. உடல் சூட்டை சீராக வைத்துக்கொள்வதால் பெரிய நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். அரசாங்கத்தின் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சில சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சக நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அரசியல்துறையினர் கடுமையாக உழைத்து சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

பெண்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் திறமை அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சினை தீர்க்க உதவி செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களைப் படிப்பது நல்லது. அடுத்தவரை நம்பி காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நன்மை தரும்.

பரிகாரம்: அம்மனை வழிபட்டு வாருங்கள். எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனக்கவலை நீங்கும்.
---------------------------------------

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் உங்களின் பணத்தேவை பூர்த்தியாகும்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. பயணங்கள் மூலம் சில முக்கிய நபர்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். திடீர் மனக் குழப்பம் ஏற்படும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிலருக்கு கருத்து வேற்றுமைகள் உண்டாகலாம். எனவே தேவையில்லாமல் வார்த்தைகளை விட வேண்டாம். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் மெத்தனப்போக்கு காணப்பட்டாலும் பணவரத்து சுமாராக இருக்கும். சரக்குகளை கவனமாகக் கையாள்வது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையைச் செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள்.

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வேலைகள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

அரசியல்துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வாருங்கள். முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
---------------------------------------

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்