மக்களைத் தேடி முதல்வர் திட்டத்தில் 2-வது நாளாக மனு அளித்த மக்கள் :

மக்களைத் தேடி முதல்வர் திட்டத்தில் 2-வது நாளாக மனு அளித்த மக்கள் :
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக மக்களைத் தேடி முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

தஞ்சாவூர் தொகுதியில் தஞ்சாவூர், வல்லம், நாஞ்சிக்கோட்டையிலும், திருவையாறு தொகுதியில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டி ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற முகாம்களில் ஏராளமான பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிகளுக்கு, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in