மனைவியை கொன்ற வழக்கில் - காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பிய இளைஞருக்கு அரிவாள் வெட்டு :

மனைவியை கொன்ற வழக்கில் -  காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பிய இளைஞருக்கு அரிவாள் வெட்டு :
Updated on
1 min read

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி (22). இவர் சில மாதங்களுக்கு முன்பு கிளாடிஸ் ராணியை காதலித்து திருமணம் செய்தார்.

திருமணத்துக்குப் பிறகு, ராணி ஒருவருடன் தொடர்ந்து மொபைல் போனில் பேசி வந்த தால் ஜோதிமணி சந்தேகம் அடைந்தார். இந்நிலையில், தனது மனைவி படித்த கல்லூரியில் அவரது டிசியை வாங்குவதற்கு அழைத்துச் சென்றபோது, இடையில் சிந்தாமணி ரோட்டில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜோதிமணி பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின், சோழவந்தான் காவல் நிலையத்தில் கடந்த 25-ம் தேதி முதல் கையெழுத்திட்டு வந்தார். நேற்று முன்தினம் கையெழுத்து போட்டு விட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

திருமங்கலம் நான்குவழிச்சாலையில் பைக்கில் சென்றபோது, வடிவேல்கரை சந்திப்பு அருகே பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் ஜோதிமணியை அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. புகாரி்ன் பேரில் காவல் ஆய்வாளர் சிவக்குமார் விசாரிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in